News December 15, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (14.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News December 15, 2025
தேனி: பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது!

சின்னமனூர் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக எரசக்கநாயக்கனூர் பகுதியில் நேற்று (டிச.14) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சின்னசாமி, பாண்டி, கார்த்திக், வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News December 15, 2025
தேனியில் புத்தக திருவிழா கட்டுரை போட்டி

தேனியில் 4-ஆவது புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, தேனி மாவட்டத்தின் தனித்துவமான சிறப்புகள் மற்றும் வரலாற்று குறிப்புகள் குறித்த 1 பக்க கட்டுரையினை சிறந்த முறையில் அனுப்பும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தயார் செய்த கட்டுரையை tnibookfair2025@gmail.com என்ற மின்னஞ்சலில் டிச.18க்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News December 15, 2025
தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!

உத்தமபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் கூலித் தொழிலாளி. இவர், நேற்று (டிச.14) வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் GHல் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


