News October 14, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 13.10.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 14, 2025
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக திரிசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினருடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் இணைந்து நேற்று (அக்.13) அணை பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இடுக்கி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 13, 2025
தேனி இனிப்பகங்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரங்கள் கேக்குகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் முறையாக பதிவு செய்து கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இனிப்பு மற்றும் காரம் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் முறையாக அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
News October 13, 2025
தேனி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989