News October 25, 2024

தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

தேனி: போட்டித் தேர்வர்களுக்கு குட் நியூஸ்.!

image

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை <>கிளிக் செய்து <<>>எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை தேர்வுக்கு தயாராகும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News December 12, 2025

தேனி : VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

image

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546-255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க

News December 12, 2025

தேனி: பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

image

கதிர்நரசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் போதுமணி (43). இவருக்கு சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் போதுமணியின் கணவர் தோட்டத்துக்காக பூச்சி மருந்து வாங்கி வைத்திருந்த நிலையில் அதனை போதுமணி குடித்துள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.11) உயிரிழந்தார். ராஜ்தானி போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!