News March 31, 2025
தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 31.03.2025 10 மணி- 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 2, 2025
தேனி : இலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி

தேனியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல்28 முதல்
(30 நாட்கள்) இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். இது குறித்து சந்தேகங்களுக்கு 94427 58363 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . சுய தொழில் தொடங்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 2, 2025
பெரியகுளம் : கர்ப்பத்தை கலைக்க கூறிய கணவர்

பெரியகுளத்தை சேர்ந்தவர் ஸ்வானிகா (25). இவரும் இவரது கணவர் கவின்பிரசாத்தும் துபாயில் பணி செய்து வந்தனர். அங்கு ஸ்வானிகா கர்ப்பமானர். கணவர் கவின்பிரசாத் கர்ப்பத்தை கலைக்க கூறியுள்ளார். இதனால் ஸ்வானிகா பெரியகுளத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது கவின்பிரசாதின் தாயார் கீதாராணி கருக்கலைப்பு மாத்திரையை உண்ண வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
News April 1, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது . வளிமண்டல கீழ் அடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தேனி உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று(ஏப்ரல்.1) இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல ஏப்ரல் மூன்றாம் தேதி தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.