News December 14, 2025

தேனி: மனைவி பிரிவால் கணவருக்கு நேர்ந்த விபரீதம்

image

அம்மாபட்டியை சேர்ந்த பாண்டியராஜன், தாரணி தம்பதிக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்திலேயே தாரணி கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டில் இருமிக்கொண்டே இருந்தார். சிகிச்சைக்காக GHக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News December 19, 2025

ஆண்டிபட்டி துணைமின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் நாளை (டிச.20) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோயில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

News December 19, 2025

தேனி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் தண்டனை

image

போடி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவர் அதே பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2024 மே.8ல் செல்வராஜூவை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை நேற்று முடிந்த நிலையில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்தும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

News December 19, 2025

நலவாரிய அட்டையில் போட்டோ, கையெழுத்து மாற்ற அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்த நலவாரிய அட்டையில் உறுப்பினரின் புகைப்படம், கையெழுத்து அவரவர் இருக்கும் இடத்திலோ, அல்லது இ-சேவை மையத்திலோ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அவ்வாறு மாற்றம் செய்ய முடியாதவர்கள் தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தகவல்.

error: Content is protected !!