News October 14, 2025
தேனி: மது போதையால் ஒருவர் பரிதாப பலி

கேரளா, இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பீட்டர் (51). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கம்பம் வந்த நிலை அங்கு மது குடித்துள்ளார். கம்பம் பகுதியில் மது போதையில் நடந்து சென்றவர் தவறி சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனில் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு (அக்.13) பதிவு செய்து விசாரணை
Similar News
News October 14, 2025
தேனியில் பட்டாசு விற்போர் கவனத்திற்கு

தீபாவளி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசு கடை உரிமையாளர்கள் உரிமம் பெற்ற இடத்தில் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். சட்டவிரோத பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. அதிக ஒளி, ஒலி எழுப்பக்கூடிய வகையிலான பட்டாசுகள் விற்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
News October 14, 2025
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News October 14, 2025
தேனி அருகே கத்தியை காட்டி வழிப்பறி

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று (அக்.13) தேவாரம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இவரை பிரசாத் என்பவர் வழிமறித்து குடிப்பதற்கு பணம் கொடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். சுதாரித்துக் கொண்ட மணி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிரசாத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர்.