News December 25, 2025
தேனி: மதுபோதையில் பெண்ணை தாக்கிய இருவர் கைது!

பெரியகுளம் கீழ வடகரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது குடும்பத்தினருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் கருப்பசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கருப்பசாமி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மது போதையில் மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 27, 2025
தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? செக் பண்ணுங்க

தேனி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க
News December 27, 2025
தேனி: உங்க போனை காணவில்லையா..? NO டென்ஷன்

தேனி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News December 27, 2025
டிச.29 முதல் கோமாரி நோய் இலவச தடுப்பூசி – கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் 1,01,966 பசு மாடுகளும், 464 எருமை மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி டாக்டர், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டிச.29 முதல் ஜன.18 வரை மாடுகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை கட்டுப்படுத்தும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்க உள்ளது என கலெக்டர் அறிவிப்பு.


