News January 17, 2026
தேனி: போலி நகை அடகு வைத்து பல லட்சம் மோசடி..

பெரியகுளத்தில் உள்ள TMB-யில் திண்டுக்கலை சேர்ந்த சரவணக்குமார், இவரது நண்பர் ஆனந்தகுரு இணைந்து 30 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.17 லட்சம் கடன் பெற்றனர். கடன் தேதி முடிந்ததும் நகைகளை திருப்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் விவேக் சோதனை செய்ததில் நகைகள் போலி என தெரியவந்தது. இதுகுறித்து விவேக் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வங்கி நகை மதிப்பீட்டாளர் விக்னேஷ் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
Similar News
News February 15, 2026
தேனி: டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலி

தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியில் இன்று வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் மதுராபுரியைச் சேர்ந்த இளைஞர் பிரபாகரன் (26) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டி வந்த நபர் யார்? என தெரியவில்லை. மேலும், அவர் தப்பி ஓடியதால் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News February 15, 2026
தேனி மாவட்டத்தில் 34 கிலோ கஞ்சா பறிமுதல்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம் குமுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 நபர்களை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 34.950 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News February 15, 2026
தேனி: பைக் வாங்க ரூ.50,000 மானியம்! APPLY NOW

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <


