News March 3, 2026
தேனி: பெண் தீக்குளித்து தற்கொலை

தேனி மாவட்டம், ராஜதானி பகுதியை சேர்ந்தவர் மீனா (46). இவர் கடந்த மூன்று வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக மருத்துவமனையில் கவுன்சிலிங் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனா தனக்குத்தானே தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 3, 2026
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (மார்.03) நீர்மட்டம்: வைகை அணை: 42.26 (71) அடி, வரத்து: 128 க.அடி, திறப்பு: 972 க.அடி, பெரியாறு அணை: 116.50 (142) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 444 க.அடி, மஞ்சளார் அணை: 46.60 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 110.54 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
News March 3, 2026
தேனி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

தேனி மாவட்டம், மார்க்கையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அந்த அணியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். இதில் சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட ஏராளாமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News March 3, 2026
தேனி: குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை.!

பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் முத்துலட்சுமி (27). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது வரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த முத்துலட்சுமி சில தினங்களுக்கு முன்பு விஷமருந்தி உள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.


