News April 29, 2024
தேனி: பெண்ணை தாக்கிய கும்பல்

கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் காட்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். 6 மாதங்களுக்கு முன்பு பால்பாண்டி என்பவரிடம் ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கி அதில் ரூ.1 லட்சத்தை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணத்தை ஒரு சில நாட்களில் கொடுப்பதாக தெரிவித்த நிலையில் பால்பாண்டி சிலருடன் வந்து பணத்தை உடனே தரும்படி கூறி மகேஸ்வரியின் தாக்கியுள்ளார்.
Similar News
News December 30, 2025
தேனி: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
தேனி: சட்டவிரோதமாக மது விற்ற இளைஞர் கைது

உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (டிச.29) கூடலூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (26) என்பவர் அப்பகுதியில் உள்ள சிக்கன் கடையில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் விக்னேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 30, 2025
தேனியில் வைப்புத் தொகை தீர்வு முகாம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.9,45,611 வைப்புத்தொகை சம்பந்தப்பட்ட 8 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.


