News December 24, 2025
தேனி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தேனி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்ததால் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமித்து செய்து 11 கடைகளை அகற்றினர் மேலும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் ஆக்கிரமித்து அரசுக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதால் அகற்றினர்.
Similar News
News January 1, 2026
தேனி: கிணற்றில் அழுகிய நிலையில் சடலம்….திடீர் திருப்பம்

போடியை சேர்ந்தவர் ரமேஷ், 2018ல் காணாமல் போனார். இவரது மனைவி மேகலா புகாரில் போலீசார் விசாரித்தனர். 2018 ல் வீரபாண்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ரமேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில் போடி பாண்டி என்பவர் சொத்து தகராறில் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.இவ்வழக்கில் தொடர்புடையவர்களை நவம்பரில் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகசுந்தரத்தை 37, கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 31, 2025
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 31, 2025
தேனி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <


