News December 14, 2024
தேனி: நிலுவையில் இருந்த 10077 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது

தேனி மாவட்ட தேசிய சட்டப் பணி ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தின்படி பெரியகுளம் உத்தமபாளையம் ஆண்டிபட்டி மற்றும் போடி உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) நடைபெற்றது. இதில் நீண்ட நாளாக நிலுவையில் இருந்த 10077 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இருந்தனர்.
Similar News
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <
News August 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (ஆக.20) நீர்மட்டம்: வைகை அணை: 69.59 (71) அடி, வரத்து: 802 க.அடி, திறப்பு: 969 க.அடி, பெரியாறு அணை: 135.20 (142) அடி, வரத்து: 2001 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.