News December 19, 2025

தேனி: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் தண்டனை

image

போடி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ். இவர் அதே பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 2024 மே.8ல் செல்வராஜூவை கைது செய்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணை நேற்று முடிந்த நிலையில் செல்வராஜூக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்தும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

Similar News

News December 23, 2025

தேனி: வேலைக்கு சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு

image

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (55). கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் கண்டமனூர் பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். வேலை செய்து கொண்டிருந்த பொழுது முருகன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடன் பணிபுரிபவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு (டிச.22) பதிவு.

News December 23, 2025

தேனி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<> இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். (அ) 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News December 23, 2025

தேனி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!