News October 13, 2025
தேனி: தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

அல்லிநகரம் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜா. இவரது மனைவி ரம்யா. இவர்களது 11 மாத குழந்தை யஷ்வந்தன் நேற்று (அக்.12) மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். குழந்தையை பெற்றோர் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 6, 2026
தேனி: கார் மீது லாரி மோதி இருவர் பலி.!

கம்பத்தை சேர்ந்த கார் மெக்கானிக்கான சுர்ஜித் (24), தீபக் (23) ஆகியோர் வாடிக்கையாளரின் காரை பழுது நீக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டமாக ஓட்டிச் சென்றுள்ளனர். அனுமந்தன்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது சந்தீப் (46) என்பவர் ஒட்டி சென்ற லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுர்ஜித், தீபக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.
News April 6, 2026
தேனி: கார் மீது லாரி மோதி இருவர் பலி.!

கம்பத்தை சேர்ந்த கார் மெக்கானிக்கான சுர்ஜித் (24), தீபக் (23) ஆகியோர் வாடிக்கையாளரின் காரை பழுது நீக்கி நேற்று முன்தினம் சோதனை ஓட்டமாக ஓட்டிச் சென்றுள்ளனர். அனுமந்தன்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்த பொழுது சந்தீப் (46) என்பவர் ஒட்டி சென்ற லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சுர்ஜித், தீபக் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு.
News April 6, 2026
தேனி: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை

வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு உடல் நல குறைபாடு காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. அதனால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமலும் இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த பால்பாண்டி நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து உள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு.


