News November 7, 2025
தேனி: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு சிறை

ஆண்டிபட்டி தாலுகா பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் 2023.அக்.1ல் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். கடமலைக்குண்டு போலீசார் முருகனை கைது செய்த நிலையில் இந்த வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று (நவ.6) முருகனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.
Similar News
News January 23, 2026
தேனி: வாகனம் மோதி ஒருவர் பரிதாப பலி

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். அக்குபஞ்சர் மருத்துவரான இவர் நேற்று முன் தினம் மாலை வத்தலக்குண்டு – பெரியகுளம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.
News January 23, 2026
தேனி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

தேனி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 23, 2026
ஆண்டிபட்டியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தெய்வேந்திரன் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.


