News November 3, 2025
தேனி சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

மதுரையில் உள்ள கார் பராமரிப்பு நிலையத்தில் வேலை பார்க்கும் தேனியை சேர்ந்த ஜோதிராஜசேகரன் என்பவர் பராமரிப்பிற்காக வந்த கார் ஒன்றை சோதனை செய்வதற்காக நேற்று (நவ.2) தேனிக்கு எடுத்து வந்துள்ளார். கார் பெரியகுளம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News November 3, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <
News November 3, 2025
போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


