News December 19, 2025
தேனி: கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் பலி!

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த தம்பதி கந்தன், மகேஸ்வரி. அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இதனால் தற்போது வசிக்கும் பழைய வீட்டில் கடந்த 14ம் தேதி டீ போடுவதற்கு மகேஸ்வரி சென்றார். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது தெரியாமல் லைட் சுவிட் போட்டபோது சிலிண்டர் வெடித்து மகேஸ்வரி தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த அவரை GHல் அனுமதித்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 22, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

வீரபாண்டி, கண்டமனூா் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி, கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம் (ம) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
News December 22, 2025
தேனி: டிகிரி போதும்., BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

தேனி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் இங்கு<
News December 22, 2025
தேனி: தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!

ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மகள் சுஷ்மிதா (21) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அடிக்கடி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது தந்தை ரஞ்சித் கண்டித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று (டிச.21) சுஷ்மிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


