News December 25, 2025

தேனி: காட்டுப்பன்றி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு!

image

பெரியகுளம் பகுதியை சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி விஜயலெட்சுமி. இருவரும் கடந்த 18-ஆம் தேதி சுக்காம்பாறை ஓடைவயல் பகுதியில் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் ராமசாமி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

Similar News

News December 29, 2025

தேனி: இத தெரிஞ்சுக்காம இனி சிலிண்டர் வாங்காதீங்க!

image

தேனி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

தேனி: கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் – தம்பி!

image

கோம்பையை சேர்ந்தவர் முருகேசன் (55). இவர் இடுக்கி மாவட்டத்தில் பணிபுரிந்தர். சம்பவத்தன்று தான் தங்கியிருந்த வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரது உடலை கைப்பற்றிய நெடுங்கண்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரனையில், முருகேசனின் சகோதரர் மகன்களான விக்னேஸ்வர் (25), புவனேஸ்வர் (25) ஆகியோர் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முருகேசனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ததது தெரியவந்தது.

News December 29, 2025

தேனி: அரசு பேருந்து மீது மோதி கண்டக்டர் பலி!

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் (54). அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 25ம் தேதி பணி முடித்துவிட்டு இரவு டூவீலரில் காமாட்சிபுரம் அருகே சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியகுளம் போலீஸார் ஓட்டுநர் கதிரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!