News January 22, 2026
தேனி: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ரோஹித் (19). தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்து நண்பர்களுடன் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த ரோஹித் அவர்களது பழைய வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
தேனி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

தேனி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்தும் 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
தேனி: கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது

உத்தமபாளையம் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.21) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள கோயில் அருகே ரோஷன் (19), ராகவன் (20) ஆகியோர் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
News January 22, 2026
தேனி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க


