News October 3, 2025
தேனி: கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் திருட்டு

தேனியை சேர்ந்தவர் சந்தன பீர் ஒலி. இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக பைக்கில் வத்தலகுண்டு நோக்கி சென்றுள்ளார். எ.காமாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கண்ணில் தூசி பட்டதால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள நர்சரியில் தண்ணீர் வாங்கி முகத்தை கழுவி உள்ளார். மீண்டும் திரும்பி வந்த பொழுது பைக் திருடப்பட்டது தெரிய வந்தது. திருட்டு குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (அக்.3) பதிவு.
Similar News
News October 3, 2025
இல்லத்திற்கே ரேசன் பொருட்கள் ஆட்சியர் அறிவிப்பு!

தேனி மாவட்டத்தில் உள்ள முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 05.10.2025 மற்றும் 06.10.2025 ஆகிய இரண்டு நாட்களில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் அனைத்தும் வழங்கப்படவுள்ளது, என தேனி மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News October 3, 2025
தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0454-6262112 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News October 3, 2025
தேனி: கழுத்தை நெறித்த கடனால் பறிபோன உயிர்

போடி பகுதியை சேர்ந்தவர் இன்பம் (50). இவர் மகளிர் குழுக்களில் லோன் எடுத்துள்ளார். அதற்கான தொகையை சரிவர கட்ட முடியாத நிலையில் வேதனையில் இருந்து வந்த இன்பம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் நேற்று (அக்.2) வழக்கு பதிவு செய்து விசாரணை