News December 13, 2025
தேனி: ஏலக்காய் வியாபாரிக்கு கொலை மிரட்டல்!

போடி சடையாண்டி தெருவை சேர்ந்த சதீஸ்குமாரும், சந்தைப்பேட்டை தெருவை சோ்ந்த நவீன்குமாரும் சோ்ந்து ஏலக்காய் வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில் நவீன்குமாா், சதீஸ்குமாரிடம் 500 கிலோ ஏலக்காய்களை வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை சதீஸ்குமாா் கேட்ட போது ஏற்பட்ட பிரச்சனையில் நவீன்குமாா், சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து போடி போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை.
Similar News
News December 18, 2025
தேனி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 18, 2025
தேனி: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்

போடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் வாஞ்சிநாதன், கெளசல்யா. அரசு பள்ளி ஆசிரியரான வாஞ்சிநாதனுக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட கெளசல்யாவையும், இவரது குழந்தைகளையும் வாஞ்சிநாதன் தாக்கி கெளசல்யா பெயரில் உள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றி தருமாறு கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 18, 2025
தேனி: மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை!

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் விவியன் (23). இவர் கடந்த சில மாதங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு அவ்வப்போது தானாக பேசி வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்ட நிலையில் அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த கார்த்திக் விவியன் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.17) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை.


