News January 7, 2026
தேனி: இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…!

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (28). இவரது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த உமா மகேஸ்வரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Similar News
News January 9, 2026
தேனியில் FREE வக்கீல் சேவை..! தெரிஞ்சிக்கோங்க…

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04546-291566
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 9, 2026
தேனியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…!

ஆண்டிபட்டி அருகேயுள்ள தா்மத்துப்பட்டி விலக்கு பகுதியில் பால்ராஜ் என்பவா் டீக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது கடை அருகே பாப்பம்மாள்புரத்தை சோ்ந்த செல்வி என்பவா் மாட்டுத் தீவனக் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பால்ராஜ், செல்வி ஆகியோரது கடைகளின் பூட்டை உடைத்து ரூ.98,000 மற்றும் 5,000 மதிப்பிலான பொருள்கள் திருபட்டன. இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News January 9, 2026
தேனி: தேவாரத்தில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையின் 24-வது முகாம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஜன.10) நடைபெறவுள்ளது. முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், காசநோய், தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். எனவே, அப்பகுதி மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.


