News February 8, 2026
தேனி: இரு தரப்பினா் இடையே மோதல்; 4 பேர் மீது வழக்கு

தேவாரம் அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கௌதமன் (40). உறவினா் இறப்புக்கு சுடுகாடு சென்றுவிட்டு வரும்போது இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சேகா், குபேந்திரன், குமரேசன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டதில் கெளதமன், குபேந்திரன் ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இரு தரப்பினா் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவாரம் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News February 9, 2026
தேனி: வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜப்பன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன். இவா் 2 தினம் முன்பு வீட்டை பூட்டிவிட்டு தேனியில் உள்ள மகள் வீட்டு விஷேசத்துக்கு குடும்பத்துடன் சென்றாா். நேற்று (பிப்.8) வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 4.5 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டு குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News February 8, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 8.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News February 8, 2026
தேனி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே; வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE


