News December 15, 2025

தேனி: இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் வாக்குமூலம்!

image

தேவாரம் முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்த தம்பதியர் பிரதீப், நிகிலா. குடும்ப பிரச்சனை காரணமாக நிகிலா, மனைவியின் சகோதரர் விவேக் இருவரையும் கணவர் பிரதீப் டிச.11ம் தேதி வெட்டி படுகொலை செய்தார். கொலை வழக்கில் பிரதீப் அவரது தந்தை சிவகுமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே போலீசாரிடம் எங்களது குடும்பத்தை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

Similar News

News December 15, 2025

ஒரு வாரம் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது – ஆட்சியர்

image

தேனி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரையிலான ஒரு வார காலத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. இதில் திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.‌ இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் பங்கேற்க உள்ளனர்.‌

News December 15, 2025

தேனி: சிறுவன் கீழே விழுந்து உயிரிழப்பு

image

கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது 3.5 வயது மகன் சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது, முன்புறமாக குப்புற விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று(டிச.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

News December 15, 2025

தேனி: வீட்டில் வழுக்கி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

image

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராணி (69). இவர் நேற்று முன்தினம் பாத்ரூம் சென்ற பொழுது அங்கு வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நேற்று (டிச.14) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!