News March 25, 2025

தேனி : இதை மட்டும் சொல்ல வேண்டாம் 

image

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள்  தங்களது செல்போனில் வரும் OTPஐ யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும், தற்போது OTP குற்றங்கள் பெருகி வருவதால்  OTP மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட வாய்ப்பு உள்ளது எனவும் மாவட்ட காவல்துறை  தெரிவித்துள்ளது. வங்கி , இணையவழி  குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 26, 2025

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

image

பெரியகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில்  தென்கரை போலீசார் அவரை 2023 ஆம் ஆண்டு கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News March 25, 2025

தேனி : ரூ.50,000 வருமானம் தரும் தொழில் ஐடியா

image

தேனியில் சுய தொழில் செய்ய பெண்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில்தான் காளான் வளர்ப்பு. வீட்டிலேயே குடில் அமைத்து காளான் வளர்த்து விற்பனை செய்யலாம். . அதேபோல உற்பத்தி செய்யப்பட்ட காளானிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களான காளான் மால்ட் , காளான் தோசை பொடி ,காளான் முறுக்கு போன்ற பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் மாதம் 50,000 வரை வருமானம் பெற முடியும் .

News March 25, 2025

தேனி மாவட்டத்தில் புதிதாக 17 மினி பஸ்கள் இயக்க அனுமதி

image

தேனி மாவட்டத்தில் 35 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க பிப்.13.ல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் 35 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரிசீலனை செய்து, கலெக்டர் ரஞ்சித்சிங்கின் ஒப்புதல் பெற்று 17 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!