News January 13, 2026
தேனி: ஆட்டோ மோதி ஒருவர் பலியான சோகம்.!

அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்மணி (75). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சந்தோஷ் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (ஜன.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
தேனி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News January 25, 2026
தேனி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 25, 2026
தேனி: மரக்கிளைகளை வெட்ட முயன்றவர் பலி

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (55). இவர் ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள மரக்கிளைகளை அறுக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முனியாண்டிக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (ஜன.24) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு.


