News April 12, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

வத்தலக்குண்டை சேர்ந்தவர் ராஜா. இவர் ஜல்லிப்பட்டி டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது டூவீலரில் வத்தலகுண்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஏ.புதுப்பட்டி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த லாரி ராஜா சென்ற டூவீலர் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 9, 2025
தேனி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 9, 2025
கம்பம்: தாய் திட்டியதால் இளைஞர் தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அஜித் (26). இவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அஜித் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் நேற்று (ஜூலை.8) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News July 8, 2025
இதெல்லாம் நம்பாதீங்க – தேனி மாவட்ட காவல்துறை

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு செல்போனில் வரும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வரும் போலி குறுஞ்செய்தி, லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும் இதனால் வங்கி கணக்குகளிலிருந்து மோசடி நபர்களால் பணம் எடுக்கபடும் எனவும் தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகம் இன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது போன்ற குற்றங்களை 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.