News December 24, 2025
தேனி: அரசு நிலத்தில் மணல் அள்ளிய 9 போ் மீது வழக்கு

போடி அருகே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட அம்பரப்பா் மலைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் நேற்று (டிச.23) அங்கு சென்றனர். அங்கு ஜேசிபி, டிப்பர் லாரி மூலம் 9 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிய நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை.
Similar News
News December 26, 2025
தேனியில் கணவரை கொலை செய்த மனைவி!

பல்லவராயன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மர் (57). இவருடைய மனைவி சந்திரா (54). இவர்களது மகன் அஜித் (27). தர்மர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தர்மர் வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவியும், மகனும் கட்டையால் தர்மரை தாக்கி கொலை செய்தனர். கோம்பை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News December 25, 2025
தேனி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப சுலபம்..

தேனியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <
News December 25, 2025
தேனி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

தேனி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.


