News March 21, 2025
தேனியில் 26 டன் ரேஷன் அரிசி பதுக்கல்

அல்லிநகரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோடவுனில் 26 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பதுக்கியதை, வழங்கல் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரவிக்குமார், துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 27, 2025
தேனியில் நீச்சல் பயிற்சி முகாம்

தேனி மாவட்டத்தில் நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2025 முதல் 08.06.2025 வரை 5 கட்டங்களாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் 1200 ரூபாய் கட்டணம் செலுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
News March 27, 2025
தேனி: திருமணத்தடையை நீக்கும் அற்புத கோவில்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ளது காளாத்தீஸ்வரர் கோவில் . இந்த கோவிலில் ஞானாம்பிகையுடன் சிவன் சன்னதி உள்ளது . கோவில் திருவிழா சமயங்களிலும் , பங்குனி சிறப்பு நாட்களிலும் இங்கு நடைபெறும் நித்யபூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் திருமணத்தடை விலகும் என்பது ஐதீகம். திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News March 27, 2025
காணாமல் போன பள்ளி மாணவர்கள் கோவையில் மீட்பு

தேனி, பெரியகுளத்தை சேர்நத்வர் ராஜ்குமார் மகன் ஜெயன் 13. அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் சுரேஷ் மகன் மதுசூதனன் 13. இருவரும் 7 ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்துள்ளனர்.இதனால் இருவரும் கோபித்துக்கொண்டு கோவை புறப்பட்டனர். மாணவர்களின் நண்பர் ஒருவர் மூலம் இருவரும் கோவை செல்வதை உறுதி செய்தனர். போலீசார் அவர்களை மீட்டு நேற்று பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.