News September 22, 2025

தேனியில் மாரடைப்பு ஏற்பட்டு ஏட்டு பலி

image

கண்டமனுாரை சேர்ந்தவர் விஜயராகவன் 38.ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் டூவீலர் ரோந்து பிரிவில் ஏட்டாக பணியாற்றினார். நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டில் துாங்கி எழுந்தவர், உடல் நலம் பாதித்து சோர்வாக இருந்த சில நிமிடங்களில் மயக்கம் அடைந்து, இறந்தார். போலீஸ் பணியில் 2009 மார்ச் 1ல் சேர்ந்த விஜயராகவனுக்கு லிங்கம்மாள் என்ற மனைவி, ஹரிஷ் ராகவன் 8, லோஹித் ராகவன் 6, இரு மகன்கள் உள்ளனர்.

Similar News

News November 15, 2025

தேனி: ரூ.88,635 ஊதியத்தில் வேலை!

image

தேனி மக்களே, ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 15, 2025

போடி வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

image

போடி வணிக வரித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய செல்லையா (59) என்பவர் 2013.ல் வியாபாரி ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது செல்லையா மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலக உதவி ஆய்வாளராக உள்ளார். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செல்லையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News November 15, 2025

தேனியில் நாளை ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு

image

தேனி மாவட்டத்தில் நாளை (நவ.16) தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 220 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு எழுதுவோர் காலை 8 மணிக்கு முன் தோ்வு மையத்துக்கு செல்ல வேண்டும். 8 மணிக்கு மேல் தோ்வு மைய நுழைவு வாயில்கள் மூடப்பட்டும். தோ்வு குறித்த விவரங்களை 9487771077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். SHARE IT

error: Content is protected !!