News September 12, 2024

தேனியில் பள்ளி மாணவி கர்ப்பம் இளைஞர் போக்சோவில் கைது

image

பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் இத்ரீஸ். இவர் 11 படிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தனிமையில் இருந்துள்ளார். பிறகு மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே, ஸ்கேன் செய்ததில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பிறகு தேனி அனைத்து மகளிர் போலீசார் இத்ரீஸ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இத்ரீஸை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News July 6, 2025

தேனியில் கிணற்றில் பிணமாக கிடந்த கூலித்தொழிலாளி

image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(60). தேவதாஸ் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடலை க.விலக்கு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 5, 2025

மனை வைச்சீருக்கீங்களா இதலாம் சரி பாருங்க!

image

தேனி மக்களே அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், (ஜூலை 1) முதல் அவற்றை வரன்முறை செய்ய விண்ணப்பிக்க தகவல் வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்டத்தில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 5, 2025

வரதட்சனை புகாரளிக்க.. இதை தெரிஞ்சுக்கோங்க!

image

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வரதட்சனையால் பெண்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். தேனி மாவட்ட பெண்கள் வரதட்சனை கொடுமையால் பாதிக்கபட்டால் வரதட்சணை கேட்டதற்கான குறுஞ்செய்திகள், ஆடியோ பதிவுகள், கடிதங்களை கொண்டு தேனி மாவட்ட சமூக நல அலுவலரிடம் நேரடியாக சென்று புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைத்து பெண்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!