News April 10, 2025
தேனியில் நாளை கொட்டப் போகும் மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை (ஏப்.11) கீழ்க்கண்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 52 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 98.07 (126.28) அடி, வரத்து: 5.62 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.
News April 18, 2025
தேனி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04546 –254956
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். ஆபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.
News April 18, 2025
நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி

போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் 42. கூலித் தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரும் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர். பின் பக்கமாக அதிவேகமாக கார் முன்னாள் சென்ற இளங்கோவன், கதிரேசன் மீதும் மோதியதில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். உரிய நிவாரணம் வழங்க கோரி ராசிங்காபுரம் ரோட்டில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.