News August 26, 2024
தேனியில் குறு மாரத்தான் போட்டிக்கு அழைப்பு

தேனி, சின்னமனூர் ஒன்றியம், மார்க்கையன்கோட்டை அய்யப்பன் கோவில் திடலில், வரும் செப்.,5 ஆம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வ. உ. சி இளைஞர்கள் அறக்கட்டளை சார்பில் 2-ம் ஆண்டு குறு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. போட்டியின் முதல் சுற்று 16 வயது முதல் 23வயது வரை, 2ம் சுற்று 10வயது முதல் 15வயது வரை நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
Similar News
News September 18, 2025
தேனியில் எலக்ட்ரீசியன் மர்ம மரணம்

பூதிப்புரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார் 42. திருமணம் ஆகவில்லை. இவர் பூபால சமுத்திரக் கண்மாய் அருகே நஞ்சுண்ட ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் இறந்து கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் உடலைகைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
News September 18, 2025
தேனியில் கேரளா கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்

கம்பத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கேரள கழிவுகள் கொட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேற்று (செப்.17) சம்பந்தப்பட்ட இடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கழிவுகளை கொட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்துகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தி அனுமதிக்கப்பட்டனர்.
News September 18, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 17.09.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தேனி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.