News October 23, 2024
தேனியில் கால்நடை கணக்கெடுப்பு பணி- ஆட்சியர் தகவல்

தேனி மாவட்டத்தில் 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்கப்பட உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் 21வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 25ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
தேனி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

தேனி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
News November 7, 2025
தேனி: தாய், தந்தை என 4 பேர் மீது பாய்ந்த போக்சோ

போடியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். சிறுமி என தெரிந்தும் திருமணத்திற்கு உடந்தையாக பிரகாஷின் தாயார் அமுதா, சிறுமியின் தாய், தந்தை இருந்துள்ளனர். இதுகுறித்து போடி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், அமுதா உள்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 7, 2025
BREAKING தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இன்று தேனி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.


