News November 14, 2024
தேனியில் கனிமவள அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் முழுவதும் குளம் மற்றும் கண்மாய்களில் அதிக அளவு வண்டல் மண் திருட்டு நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக கனிமவள அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், இதற்கு அதிகாரிகள் துணைபோகின்றதை கண்டித்தும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக உத்தமபாளையம், ஆண்டிபட்டி பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
Similar News
News March 2, 2026
தேனி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்

சின்னமனூர் பகுதியை சோ்ந்த ராஜா என்பவரது மகன் நாகமுருகன். இவர் தனது நண்பா்களுடன் முல்லை பெரியாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு வரை சிறுவன் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறுவனை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
News March 1, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 01.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 1, 2026
தேனி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தேனி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <


