News October 22, 2025
தேனியில் ஒரே நாளில் 19 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் உள்ள அரண்மனை தெரு பாரஸ்ட் ரோடு கடைவீதி சுதந்திர வீதி புதிய பேருந்து நிலையம் அக்கிரகாரம் பெருமாள் கோவில் தெரு தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 20ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 19 டன் குப்பைகள் சேர்ந்துள்ளனர். அதை பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களைக் கொண்டு அகற்றி உள்ளனர். என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 22, 2025
தேனி: வாகன விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

தேனி மாவட்டம் கன்னிசேர்வைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்நாத் (16). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு தாத்தாவின் டூவீலரை எடுத்துச் சென்றுள்ளார். சின்னமனுார் ஹைவேவிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த மீடியனில் பைக் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ராம்நாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு (அக்.21) பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 22, 2025
தேனி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

தேனி மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் <
News October 22, 2025
தேனி: நண்பரை பார்க்க சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

திண்டுக்கல், நிலக்கோட்டை தாலுகா, எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் 30. தேவதானப்பட்டியில் தனது நண்பரை பார்ப்பதற்கு டூவீலரில் சென்றார். அட்டணம்பட்டி பிரிவு பைபாஸ் ரோடு பால்பண்ணை அருகே திரும்பும் போது, டூவீலர் மீது கார் மோதியது.பலத்த காயமடைந்த அசோக் குமார் பெரிய குளம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.