News March 16, 2025
தேனியில் ஐந்து இடங்களில் தரைப்பாலம் அமைகிறது!

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் ரூ.2.26 கோடி மதிப்பில் துார்வாரும் பணியை நகராட்சி துவங்கி உள்ளது. இந்த வாய்க்காலில் 5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 95 மீ., நீளம், 9 மீ., அகலம், 3 மீ., ஆழத்திற்கு துார்வாரும் பணிகள் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து இடத்தில் தரைப்பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
Similar News
News March 16, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 16) நீர்மட்டம்: வைகை அணை: 59.84 (71) அடி, வரத்து: 114 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.75 (142) அடி, வரத்து: 50 க.அடி, திறப்பு: 322 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: 0 க.அடி, திறப்பு: 45 க.அடி, சோத்துப்பாறை அணை: 70.71 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 32.60 (52.55) அடி, வரத்து: 9 க.அடி, திறப்பு: இல்லை.
News March 16, 2025
மீண்டும் குரங்கணி-டாப்ஸ்டேஷன் இடையே ரோப்கார்

போடி குரங்கணி – டாப் ஸ்டேஷனுக்கு மீண்டும் ரோப்கார் அமைக்கும் திட்டம் துவக்கப்படுமா என எதிர்பார்ப்பு உள்ளது. திட்டம் செயல்படுத்துவதாக அமைச்சர்கள் அறிவித்தும் நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் இல்லை.சுற்றுலா வருகை அதிகரித்து வரும் நிலையில் குரங்கணி டாப் ஸ்டேஷனுக்கு ரோப்கார் அமைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் அரசுக்கு வலியுறுத்தினர்.
News March 16, 2025
அண்ணணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கை கைது

தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவரது சகோதரி செல்வி 50. கடந்த நவம்பரில் முருகன் உடல் நிலை பாதிப்படைந்ததால் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதனிடையே முருகனின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து செல்வி முருகனின் அனுமதி இல்லாமல் ரூ. 5.04 லட்சத்தை எடுத்தார். தங்கை பண மோசடி செய்ததை முருகன் கண்டறிந்து போலீசில் புகாரளித்தார்.