News October 23, 2025
தேசிய நெடுஞ்சாலை கிடந்த பெண் சடலம்

பாலக்கோடு கொம்மநாயக்கனஅள்ளி NHல்
சுமார் 45 வயது பெண் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் நேரில் வந்து பார்வையிட்டார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர் மேலும் கொல்லப்பட்டவர் கள்ளக்காதல் விவகாரர்கள் கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
Similar News
News October 23, 2025
தருமபுரியில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
தர்மபுரியில் காற்றுமாசு இயல்பு விட அதிகரிப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு & ஒலி மாசு அளவை கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரியில் வழக்கமாக காற்றின் தர குறியீடு 100 புள்ளியாக இருக்கும், தீபாவளி பட்டாசு வெடிக்கப்பட்டதில் மாசுபாடு அதிகரித்து 120 புள்ளிகளும் வரை அதிகரித்து இருக்க வாய்ப்புள்ளதாக நேற்று (அக்.22) அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
News October 23, 2025
தருமபுரியில் விலை கிடுகிடுவென உயர்வு

தருமபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நேற்று (அக்.22) ஒரு கிலோ தக்காளி பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (அக்.23) கிலோவிற்கு ₹8ரூபாய் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிலோ ₹26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் தக்காளி விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


