News November 21, 2024

தேசிய சிலம்பம் போட்டி: விழுப்புரம் மாணவர்கள் பதக்கம்

image

பெங்களூரில் உள்ள அத்திபள்ளியில், கடந்த 17ஆம் தேதி தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் எம்.எஸ். சிலம்பாட்ட கழகத்தின் மாணவர்கள் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில், ஒற்றை கம்பு சிலம்பாட்ட பிரிவில் 35 மாணவர்கள் பங்கு பெற்று பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களையும் பிடித்து, பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை வென்றனர்.

Similar News

News August 6, 2025

தேர்வர்களுக்கு சிறப்பு பஸ்: ஆட்சியர்

image

விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி,அரசு கலை கல்லுாரி வி.ஆர்.பி.,மேல்நிலைப் பள்ளி,அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளி ஆகிய இடங்களில், ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

விழுப்புரத்தில் இன்று (ஆக.6) உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.6) உங்களுடன் ஸ்டாலின் முகாம் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், வானூர் வட்டாரம் பி.பி.எஸ் மஹால் டி.பரங்கனி, மேல்மலையனூர் கோடிஸ்வரன் திருமண மஹால் பெருவளூர், முகையூர் அலமேலு நாகராஜன் திருமண மண்டபம் அந்திலி, கோலியனூர் எம்.டி சேஷாத்திரி திருமண மண்டபம் தோகைபாடி, செஞ்சி காட்டுசித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

விழுப்புரம் குடோன் ஆய்வில் 27 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மாயம்

image

விழுப்புரம் மாவட்ட டாஸ்மார்க் குடோனில், சமீப காலமாக மது பாட்டில்கள் மாயமானதாக எழுந்த புகாரில் அடிப்படையில் இன்று சென்னை அதிகாரி குழுக்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையை விட 27 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகையை அரசுக்கு, மாவட்ட அதிகாரிகள் அபராதமாக செலுத்த வேண்டும் என ஆய்வு குழுவினர் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!