News October 31, 2025

தேசிய ஒற்றுமை தினம் -புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நம் தேசத்தின் ஒற்றுமைக்கான சின்னமாக விளங்கிய சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளில் அவரின் மகத்தான தியாத்தையும் உறுதியான தலைமைத்துவத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம் ஒற்றுமை தான் நம் வலிமை ஒற்றுமை தான் நம் அடையாளம் என்று அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

புதுச்சேரி: மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து

image

புதுச்சேரி, காவல்துறை டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்தந்த காவல் நிலையங்களில், மக்கள் குறை தீர்வு நாள் முகாம் மக்கள் மன்ற நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாளை புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, காவல் நிலையங்களில் நடைபெற இருந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

புதுச்சேரி: நாளை விடுதலை நாள் விழா அணிவகுப்பு

image

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை (நவம்பர் 1) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை நடைபெறும் விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்ற உள்ளார்.

News October 31, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.எஸ்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என்று கூறினால் அவர்களது தொடர்பை உடனடியாக துண்டித்து விடுங்கள். உங்களுடைய சிம்கார்டு ஆதார்கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி அதில் AWALA பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும், அந்த பணம் தீவீரவாத செயலுக்கு பயன்படுத்த பட்டுள்ளது என்றும் மிரட்டி பணம் கேட்டால் நம்ப வேண்டாம்.” என கூறியுள்ளார்.

error: Content is protected !!