News December 15, 2025
தேசிய அளவிலான போட்டிக்கு: அரியலூர் மாணவர்கள் தேர்வு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாநில அளவிலான போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் 33 அணிகள், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. அதில் ஒன்றாக அரியலூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், அறிவியல் ஆசிரியர் ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Similar News
News December 17, 2025
அரியலூர்: தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்பு

அரியலூர் மாவட்டம் சின்னமணக்குடி காட்டுப் பகுதியில், ஆண் மற்றும் பெண் சடலம் தூக்கில் தொங்கியவாறு இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், நுரையூர் கிராமத்தைச் சேர்ந்த தேவி மற்றும் தலையாரிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பதும் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 17, 2025
அரியலூர்: சிறப்பு கடன் வசதியாக்கல் முகாம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட தொழில் மையம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், அனைத்து வங்கிகளையும் இணைத்து, மாபெரும் கடன் வசதியாக்கல் முகாம் இன்று நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04329 228555 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 17, 2025
அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


