News April 13, 2025

தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்காழி மாணவி

image

சீர்காழி ஊழியக்காரன் தோப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுபாஷினி என்கிற மாணவி நடப்பு கல்வி ஆண்டில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் 97 மதிப்பெண்கள் எடுத்து உதவித்தொகைக்கு தேர்வு பெற்றுள்ளார். தேர்வில் சிறந்து விளங்கியதற்காக மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News April 15, 2025

மயிலாடுதுறையில் கோடை விடுமுறைக்கு ஏற்ற இடங்கள்

image

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில் மயிலாடுதுறையில் நீங்கள் செல்ல வேண்டிய இடங்கள்: 1. பூம்புகார், 2. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மற்றும் கடற்கரை, 3. திருமுல்லைவாசல், 4.கீழபெரும்பட்டினம், 5.சீர்காழி, 6.பழையார் கடற்கரை, 7. திருவெண்காடு, 8.அனந்தமங்கலம் ஆகியவை கோடைகாலத்திற்கு ஏற்ற இடங்கள் ஆகும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.. உங்களுக்கு தெரிஞ்ச இடத்தை கமெண்ட் பண்ணுங்க

News April 15, 2025

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 PACKING HELPER காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வது படித்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 30க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பச்சிளம் குழந்தை பரிதாப பலி

image

செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு மைதானத்தில் விஜய் என்பவர் குடிசையமைத்து மனைவி, மகன் ராகவன்(1½) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மக்களுக்கு இலவச உணவு வழங்க வந்த சரக்கு வாகனம் குழந்தை ராகவன் மீது மோதியது. படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேன் டிரைவர் ரஜினியை(40) போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!