News April 8, 2025

தேங்காய் தோட்டத்தில் மயங்கி விழுந்து பெண் பலி

image

புன்னம் பகுதியை சேர்ந்த பொத்தான் என்பவரது மனைவி பார்வதி, (55) இவர் பழமாபுரம் பகுதியில், சேகர் என்பவரது தேங்காய் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 17, 2025

போக்சோ கைதிக்கு நீதிமன்றம் தண்டனை !

image

கரூர் வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அப்துல் சமத் (59) என்பவர் மீது கரூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று(ஏப்.16) கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

News April 16, 2025

சிறுமி பாலியல் வழக்கில் 6 நபர்களுக்கு அதிரடி தீர்ப்பு 

image

கரூர், ராயனூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த வழக்கில் கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நிஷாந்த், அரவிந்த் ஆகியோர்களுக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத், பார்த்திபன் ஆகியோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதத்துடன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

கரூா் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கல்யாண வெங்கட்ரமணர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!