News November 3, 2025

தெலங்கானா பஸ் விபத்து.. நெஞ்சை உலுக்கும் போட்டோ!

image

தெலங்கனாவின் ரங்காரெட்டியில் நிகழ்ந்த <<18183288>>பஸ் விபத்தில்<<>> சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பரிதாபமாக மரணமடைந்த 15 மாத குழந்தையும், அக்குழந்தையின் தாயாரும் உயிரின்றி கிடக்கும் போட்டோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. பஸ் விபத்து நிகழ்ந்த இடத்தில் மரணமடைந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்க்க முடியாமல், மீட்பு பணியில் ஈடுபடுவோரும் தவித்து வருகின்றனர்.

Similar News

News November 3, 2025

மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைக்கு ஸ்பெஷல் பரிசு

image

மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நிகழ்வை நாடே கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றிய மத்தியப் பிரதேச வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ₹1 கோடி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில CM மோகன் யாதவ் அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் கிராமத்தில் பிறந்து வீராங்கனை கிராந்தி, இந்தியாவுக்கே பெருமை தேடி தந்திருப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

News November 3, 2025

BREAKING: நாடு முழுவதும் ₹3,000 ஆக உயர்கிறது

image

பிஎப் உச்சவரம்பை EPFO உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிஎப் பிடிக்க உள்ள சம்பள உச்ச வரம்பை ₹15,000-லிருந்து ₹25,000 ஆக உயர்த்தவும், வரும் டிசம்பர் / ஜனவரி முதல் இது அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மணி கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி நடந்தால், தற்போது ₹1,800 (12%) ஆகவுள்ள அதிகபட்ச பிஎப் பிடித்தம், ₹3,000 ஆக உயரும். இதனால் பணியாளரின் பிஎப் தொகை அதிகரிக்கும்.

News November 3, 2025

‘இபிஎஸ்-க்கு நோபல் பரிசு’

image

தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை கொண்டுவர EPS முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். ஜனநாயகத்தை வளர்க்க அவர் பாடுபட்டு வருகிறார் என்றும் இதற்காக அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் அவர் சிபாரிசு செய்துள்ளார். முன்னதாக, துரோகத்துக்கான நோபல் பரிசு EPS-க்கு கொடுக்கவேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இதை பற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!