News July 11, 2024
தெருநாய்கள் குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை வழக்கறிஞர் பாலாஜி, “தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது, கட்டுப்படுத்த வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை இன்று (11.7) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் திரியும் ஒட்டுமொத்த நாய்களுக்கும் கருத்தடை செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும், எத்தனை கால்நடை டாக்டர்கள் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஜூலை 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
Similar News
News September 5, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..
News September 5, 2025
BREAKING: மதுரையில் மிக அதிக சாதிய வன்கொடுமை – திருமா

மதுரை, அண்ணா பேருந்து நிலையம் அருகே நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை வந்த விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்கள் சந்திப்பில்; தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ள மாவட்டம் மதுரை. எனவே மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என பேசியுள்ளார்.