News April 24, 2024

தெப்பத்திருவிழாவை தொடங்கி வைத்த சபாநாயகர்

image

 ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோயிலின் தெப்பத்திருவிழா, இன்று இரவு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு தெப்பத்திருவிழாவை ,
தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
வி.எஸ்.ஆர்
ஜெகதீஷ்,
ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
சவுமியா ஜெகதீஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News February 9, 2026

திருநெல்வேலியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

News February 9, 2026

நெல்லை: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

image

நெல்லை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நெல்லை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0462- 2576265. SHARE பண்ணுங்க!

News February 9, 2026

நெல்லை: போக்சோவில் சிக்கிய போலீஸ்; 20 ஆண்டுகள் சிறை!

image

நெல்லை, சிதம்பராபுரத்தை சேர்ந்த போலீசார் ஆனந்த கலைச்செல்வன்(32), உறவினரின் மகளான +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2024 நவ; கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட இவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு நடந்தது. திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.12,000 அபராதம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

error: Content is protected !!