News December 15, 2025

தென்னை மரங்களுக்குக் காப்பீடு – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கையில் சுமார் 9127 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டாலோ அல்லது முற்றிலும் பயன் கொடுக்காத நிலை ஏற்பட்டாலோ இந்த இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகள் தங்களுடைய தென்னை மரங்களுக்குக் காப்பீடு செய்து பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு வட்டாரத் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News

News December 22, 2025

சிவகங்கை சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 22, 2025

சிவகங்கை: 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

image

சிவகங்கை மாவட்டம், மேல நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் சுந்தர பாண்டியன் மனைவி பிரியதர்ஷினி வயது 25 அவர்களுக்கு பிரசவ வலி காரணமாக இளையான்குடி ஆம்புலன்சுக்கு அழைப்பு வழங்கப்பட்டது. மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகான பெண் குழந்தை 108 ஆம்புலன்ஸில் பிறந்தது. பின்பு தாயும் சேயும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News December 21, 2025

சிவகங்கை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

சிவகங்கை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!