News March 5, 2025
தென்னிந்திய பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பள்ளி இதுதான்!

நாசரேத்தில் உள்ள தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளிதான் தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளியாகும். இந்திய அளவில் துவங்கப்பட்ட 3வது பெண்கள் பள்ளி. 1820ஆம் ஆண்டு அருள் திரு ஹோக் என்பவர் இந்த பள்ளியை துவங்கினார். 1877 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளியும் நிறுவப்பட்டது. பெண் கல்வியின் அவசியத்தை தமிழகத்திற்கு உணர்த்திய பெருமை இப் பள்ளிக்கு உண்டு. SHARE IT.
Similar News
News April 21, 2025
சீருடை பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 1299 சார்பு ஆய்வாளர்கள் (tnusrb_si )போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த தேர்வில் கலந்துகொள்ள உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டுதல் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் வரும் 23ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பிரிவில் 10 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிப்ளமோ படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி வி. இ ரோட்டை சேர்ந்தவர் ஜாக்சன் (61). நேற்று முன்தினம் இவர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.