News August 25, 2025
தென்காசி SBI-ல் வேலை.. நாளை கடைசி!

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News August 26, 2025
தென்காசியில் நீர்நிலைகள் கணக்கெடுக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் மூலம் 7-வது சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் 2-வது நீர்நிலைகள் கணக்கெடுப் புணி நடைபெற்று வருகிறது. 2வது நீர்நிலைகள் கணக்கெடுப்பு பணியானது கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள், நகர்புறங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
தென்காசி: ஆக.29ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆக.29 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி

தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (25.08.2025) தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.