News October 14, 2025
தென்காசி: 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி, தேனி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்காசியில் இன்று (அக் 14) முதல் அக். 29 ( ஞாயிறு) வரை 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 14, 2025
வீர தீர சாதனைகள் விருது: பதிவு செய்ய அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் 13 வயதிற்குமேல் 18 வயதுக்குள் வீரதீர சாதனைகள் புரிந்த பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்படவுள்ளது. எனவே பெண் குழந்தைகள் தாங்கள் புரிந்த வீரதீர சாதனைகள் குறித்த விபரங்கள் அதற்கான ஆதாரங்களுடன் அக். 20ம் தேதி முதல் 29க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் https://awards.tn.gov.in பதிவேற்ற ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்.
News October 14, 2025
தென்காசி: தேர்வு இல்லாமல் – அரசு வேலை வேணுமா?

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News October 14, 2025
குற்றாலம்: நாளை நடராஜமூர்த்தி கோயிலில் விசேஷம்

15.10.2025 நாளை புதன்கிழமை குற்றாலத்தில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு காலை 8 மணி அளவில் அபிஷேகமும் 09.30 மணி அளவில் தாண்டவ தீபாரதனையும் மாலை 5 மணி அளவில் அபிஷேகமும் இரவு 7 மணி அளவில் தாண்டவ தீபாராதனை இரவு 9:00 மணி அளவில் அபிஷேகமும் 09.30 மணி அளவில் வெள்ளை சாத்தி மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு